Sunday 20 August 2017

SGR190



இன்று நாம் காணும் மனிதநேய வீழ்ச்சிக்கு காரணம் இறைவன் அல்ல; இறைவனிடமும் நடிக்கத் துணிந்த மனிதனின் சுயநல எண்ணமே! நிச்சயமாக இறைவன் இருப்பது உண்மை. இறைவன், மனிதனுக்கு மட்டும் பகுத்தறியும் அறிவை கொடுத்து; நன்மை-தீமை இரண்டையும் முன்வைக்க; சுயநலத்தால் தீமையை தேர்ந்தெடுத்து கேடு அடைந்த மனிதன் இறைவனை நோவதேனோ?!
https://sabariganesh23.sarahah.com/ 

Monday 14 August 2017

SGR201


            இன்று (ஹேவிளம்பி வருடம்; ஆடி மாதம்; 29ஆம் நாள்) திரு.அப்துல் ஹமீது அவர்கள் ஆற்றிய உரை குறித்து சிந்தித்தேன். தமிழ் - தமிழில், படித்தால்; வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ; அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லை என்பது ஈடு செய்ய இயலாத ஒரு குறையாகவே உள்ளது; என்று குறிப்பிட்டார்.
            இதற்கான காரணம்; நம்முடைய அறியாமையால் உண்டான, நமக்குள் உண்டான, காரணமற்ற வெறுப்பும் - விரோதமும் தான். வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து, நாம் இன்னும் மீளவே இல்லை. நம்மை ஆளும், விஷயம் தெரிந்த உள்நாட்டு பெரிய மனிதர்களும், அவர்களின் சுயநலம் கருதி, நம்மை மீட்க விரும்பவில்லை, முயலவுமில்லை; மாறாக, இந்த வெறுப்பையும் - விரோதத்தையும் வளர்க்கவே செய்தார்கள்.
            நம் பாரத திருநாட்டின் ஆதிகால கல்வி முறை - அஷ்டாதச வித்யை - எனும், வேத - வேதம் சார்ந்த கல்வி முறை. இன்று நாம் காணும் அறிவியல் - தொழில்நுட்பம் - தொழில்முறை, அனைத்தின் மூலமும் வேதத்தில் உள்ளவைதான். எதுவுமே நமக்கு புதிதானவையோ - புதிரானவையோ அல்ல. ஆனால், நாம் வெள்ளையனின் சூழ்ச்சிக்கு பலியாகி, என்று வேதத்தையும் - பிராமணர்களையும் - சமஸ்கிருதத்தையும் விரோதித்துக் கொண்டோமோ; அன்றே நம் சிறப்பு நம்மை விட்டு அகல துவங்கிவிட்டது.
            வேத மொழி சமஸ்கிருதம் அல்ல. வேத மொழி சந்தஸ். சந்தஸ் என்பது சப்தத்தின் கால அளவு - சந்தம் - ஆங்கிலத்தில் 'மீட்டர்'. சமஸ்கிருதத்தின் வேர் சந்தஸ். நமக்கு தமிழ் தாய் என்றால், தந்தை? சமஸ்கிருதம்! தமிழும் - சமஸ்கிருதமும் தங்களுள் தங்கு-தடையின்றி சொற்களை பரிமாரிக்கொண்டுள்ளன. உதாரணம்; நாம் பயன்படுத்தும் 'ஆணி' என்ற சொல் தமிழே அல்ல; அது சமஸ்கிருதம். தமிழில் இதற்கு நிகரான வார்த்தை இல்லை.
            இன்று தமிழ் மொழி நலிந்து காணபடுவதன் காரணம்; நாம் வேதத்தையும் - சமஸ்கிருதத்தையும் விரோதித்து கொண்டதுதான். தந்தை சமஸ்கிருதத்தின் நலிவு - அழிவு; நம் தாய் விதவை ஆவதுதான். வைதவ்யம் அடைந்த நம் தாய் அழிந்து கொண்டிருப்பதில் வியப்பு ஏன்? நம் தந்தையையும் - தாயையும் கொல்லும் மக்களாக நாம் இருப்பதால், இது கலியுகம் என்பது பொருத்தமாகத்தானே உள்ளது?!
            இதிலிருந்து மீள ஒர் வழிதான் உண்டு. வேதம் பரவ வேண்டும் - வேத நெறி பல்கிபெருக வேண்டும். நம்முள் புதைந்து, கணன்று கொண்டிருக்கும் அர்த்தமில்லா விரோதமும், வெறுப்பும்; ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் மறைய வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடி, ஆவன செய்ய வேண்டும். மகவாகிய நமக்கு, தாய் வேண்டுமா - தந்தை வேண்டுமா என்றால் எப்படி? நமக்கு இருவரும் இரண்டு கண்கள். இரண்டு கண்களும் இணைந்து ஒர் காட்சி காண, நாம் முயன்றால்; தமிழ் வாழும்.
https://sabariganesh23.sarahah.com/