Friday 17 October 2014

SGR48


எது கடமை? கடவுளை அறிவதே கடமை. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளார். நாம் கடவுளிலேயே நிலைபெற்று உள்ளோம். மனசாட்சி எனும் புத்தியின் விருத்தி மூலமாய், அதற்கு அடிப்படையாகவும், அதற்கு அப்பாலாகவும் உள்ள பேரறிவு தான் ஆத்மா.
எல்லாம் சங்கல்பம். நினைப்பு. அதனால்தான் பிறப்பு. புணர்ந்த பாவமெல்லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழி பட ஓடும். குருவின் அருள் இருந்தால், சம்சார வெள்ளமும் முழங்கால் அளவே.
எவன் இருப்புள்ள அனைத்தையும் ஆத்மாவினிடத்திலேயே பார்க்கிறானோ, இருப்புள்ள அனைத்தினிடத்தும் ஆத்மாவை பார்கிறானோ, அப்போது எதையும் வெறுப்பதில்லை.
எப்போது இருப்புள்ள அனைத்தும் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ, அப்போது ஒற்றுமையை கண்ட அவனுக்கு மயக்கமேது? துக்கமேது?
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment